நூலின் ஆசிரியர் – ” காவிரிமைந்தன் “
mail ID – kavirimainthan@gmail.com
– காவிரி பாயும் சோழநாட்டைச் சேர்ந்தவர் ( திருச்சிராப்பள்ளி ).
கடந்த சில ஆண்டுகளாக “விமரிசனம்” என்கிற பெயரில் –
-வலத்தளம் ஒன்றினை உருவாக்கி, எழுதி வருகிறார்.
“சிறுமை கண்டு பொங்குவாய்” – என்கிற
மகாகவி பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்பவே இவரது
இடுகைகள் பெரும்பாலும் அமையும்.
பொதுவாக நிகழ்கால – அரசியல், சமூக,
மொழி, மற்றும் பொருளாதார அவலங்களைச் சாடியும் –
வளர்ச்சியும் நலமும் பெருகவும் விரும்பி எழுதுகிறார்.
தவறு செய்பவர்களைக் கண்டு காரி உமிழும் துணிவு வேண்டும்.
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும்,
அரசாங்கத்திற்கு பயப்படாமல், துணிந்து தங்கள் கடமையைச்
செய்ய முன் வர வேண்டும்.
நமக்காக உழைத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உழைப்பு
வீண் போகவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
இன்றில்லா விட்டாலும் நாளையாவது
இந்த நிலை மாறும்… !!!
ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.
– இவை எல்லாம் இந்த வலைத்தளத்தின் நோக்கங்கள்.